Friday, March 30, 2007

ஆவணி மூலம்



நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள்
ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல் பலவித
மான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போதுஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக
தீரும் அவருக்கு செய்பவகைகளில் சில,
வடைமாலை சாத்துதல்
செந்தூரக்காப்பு அணிவித்தல்
வெண்ணெய் காப்பு சாத்துதல்
ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்த பரிகாரங்களை நான் பலருக்கு சொல்லி நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்
வடைமாலை,,,,,அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும்
இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.
வெற்றிலைமாலை ,,,,,,,சீதையைத் தேடிதேடி பல இடங்களில் காணாது பின் அசோகவனத்தில்
அவரை சந்த்தித்தார், அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்கவும் வாழ்த்தினாள் வெற்றிலை வயிறு சம்பந்தமான
எல்லா தோஷங்களையும் போக்கும் பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம்
வாயு தொல்லை இல்லாமல் இருக்க கொடுப்பார்கள்
வெண்ணெய் சாத்துதல்,,,,,,,ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு
தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,
சிந்தூரக் காப்பு ,,,,,,சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள். "என் அவர் நலமா?"
என்று அதற்கு அனுமான் "எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றதும்
மகிழ்ச்சி தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்., இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும்
செம்மண் பூசிக் கொண்டாராம்
ராம் எழுதி மாலையாக அணிவித்தல் அனுமன் தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார்.
சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம்
ராமர் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்குவார். ராம நாமத்திற்கு அவ்வளவு மகிமை
வாலில் பொட்டு வைப்பது ,,,,,,அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான். இராவணன் முன் தன் வாலையே
சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவண்னுக்கும் மேல் உயரமாக அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும்
வாலில் வைத்த நெருப்பினால்தான் அவருக்கு சூடு தெரியாமல் ஆனால் இலங்கையே எரிந்தது
ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம்
சித்தியாகிறது என்ற நம்பிக்கை …நம்புகிறவர்களுக்கு பலிக்கிறது
ஆவணி மூலத்தன்று அனுமானை வழிபட்டு ஆசி பெறுவோமாக
விசாலம்

No comments: