Wednesday, April 25, 2007

லோகாபிரம்மம் ஸ்ரீராமன்


ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவன் பார்வதியிடம் சொலுகிறார்...
"ராம ராம் ரமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ரநாம த்த்துல்யம் ராமநாம வரானனே
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு சமமானது ராம் நாமம் நான் எப்போதும் ராம் ராம் ராம் என்ற மனோரமான ராம நாமத்தைச் சொல்கிறேன்."
இதிலிருந்தே தெரிகிறது ஸ்ரீ ராம நாமம் சொல்லக் கோடி
நனமை என்று... ஸ்ரீராமரிடம் நாம் பல நல்ல விஷ்யங்களைக் கற்றுக் கொள்ளலாம். தாய்- தந்தை, சகோதரர்கள், உறவினர்கள், மனைவி,
குடிமக்கள் எல்லோரிடமும் அசாதாரணமான ஆதர்ச புருஷராக இருந்தார். இதைக் கைகேயி முதன் முதலில் மந்தாரையின் சூழ்ச்சியில் விழாத போது சொல்லுகிறாள்.
1."தர்மக்ஞோ குணவான் ததந்த கிருதஜ்ஞ ஸதயவாஞ்சு சி
ராமோ ராஜஸுதோ ஜ்யேஷ்டோ யௌவராஜமதோர்ஹதி"

"மந்தாரையே ஸ்ரீராமன் தர்மம் தெரிந்தவன், நற்குணம் பொருந்தியவன், சத்தியம் பேசுபவன், புலன்களை வென்றவன், மூத்த மகன், செய்நன்றி மிக்கவன், பரிசுத்தமானவன் ஆகவே அவனே இளவரசன் ஆக
முழு தகுதி உள்ளவன்"

2.தாய் பக்தி, தன் தாய் கைகேயி தன்னைக் காட்டிற்கு அனுப்ப தயை இல்லாமல் செய்கை செய்த போதிலும் அவர் மேல் மிக பக்தியுடன், பணிவுடன் நடந்து கொண்டார். அவர் இலக்குவனிடம் கூறுகிறார்

"யஸ்யா மத பிஷேகார்த்தே மாநஸம் பரிதவ்யதே
மாதா ந: ஸா யத ந ஸ்யாத் ஸவிஸங்கா ததா குரு,"
ல்க்ஷ்மணா என்னுடைய் முடி சூடு விழா காரணமாக யாருடைய

"மனம் வருத்ததில் கொதிக்கிறதோ அந்தத் தாய்க்கு என்மேல் ஒரு ஸந்தேகமும் வராமல் பார்த்துக் கொள். அவர் துக்கத்தை என்னால் பார்க்க இயலாது, தாள முடியாது."

3. தந்தை பகதி
தந்தையின் ஆணையை நிறைவேற்றுவதில்ஸ்ரீ ராமனிடம் மிகவும் பக்தியும் துணிவும் சிரத்தையும் இருந்தது.


"அஹம் ஹி வசனாத் ராஜ்ஞ: பதேயமபி பாவகே
பக்ஷ்யேயம் விஷம் தீக்ஷணம் பதேயமபி சார்ணவே "


என் தந்தை மன்னர் சொன்னால் நான் நெருப்பில் கூட குதிப்பேன்,
கடும் விஷம் உண்பேன், கடலிலும் விழுவேன் ஏனென்றால் தந்தைக்கு பணிவிடை செய்வதை விட வேறு தர்மம் உலகில் இல்லை தவிர அவர் கட்டளையை நிறைவேற்றுவது என் கடமை, தர்மம்"

4.ஏக பத்னி விரதம்... சீதா தேவியை வனத்திற்கு அனுப்பியவுடன் ஒரு யாகத்திற்கு மனைவி இருக்க வேண்டும் என்ற நிலைமை வந்தவுடன் அவளைப் போல் தங்கப் பதுமைச் செய்து வேள்வியைச் செய்து
முடித்தார் அதற்கென்று வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை.

5.சகோதர பாசம்
ராமனுக்கு எல்லா சகோதரருடன் சமமாக அன்பு இருந்தது. திருமணமும் எல்லா சகோதர்களுக்கும் ஒன்றாகவே நிகழ்ந்தது. ஸ்ரீ ராம பாட்டாபிஷேகம் நாள் பொருத்தியவுடன் அவர் தம்பி இலக்குவனிடம் சொல்கிறார்


"லக்ஷ்மணேமாம் மயா ஸார்த்தம் ப்ர்ஸாதி த்வம் வஸுந்தராம்
திவிதீயம் மோந்தராத்மானம் த்வாமியம் ஸ்ரீருபஸ்திதா"


"அன்பு இலக்ஷ்மணா நீ என்னுடன் இருந்து இந்தப்பூமியை ஆண்டு உதவுவாயாக நீ என்னுடைய மற்றொரு அந்தராத்மா. பின் பரத சத்ருக்னரைப் பற்றிஅன்னைக் கோசலையிடம் தான் விடை பெற்றுச் செல்லும் நேரம் கூறுகிறார்...


"பிராத்ரு புத்ரஸமௌட்ரஷ்டவ்யௌச விஷேத:
த்வ்யா பரத் சத்ருக்னௌ பிராணை: பிரயத்ரௌ மம "

"பரதனும் சத்ருக்னனும் என் உயிரை விட எனக்கு மிகப் பிரியமானவர்கள் அவர்களை ஹே சீதே உன் புதல்வர்களைப்போல் சகோதர்களைப் போலன்பு செலுத்த வேண்டும்"


6.நட்பு... ஸ்ரீ ராமன் தன் நண்பர்களிடம் கொண்ட நட்பிற்கு அளவே இல்லை குஹன், கானகவாசி, வானரங்கள், ஜடாயூ போன்றவ்ர்களிடம் அவர் செலுத்திய அன்பு மிகவும் உயர்ந்தது.


"ஸுஹ்ருதோ மே பவந்தஸ்ச சரிரம் ப்ராதரஸ்ததா
யுஷ்மாபிர்ய்த்ருதஸ்சாஹம் வ்யஸ்நாத்காநநௌகஸ:
தந்யோ ராஜா ச் ஸுக்ரீவொ பவத் பி:ஸுஹ்ருதம்வரை

"கானக வாசிகளே வானரவீரர்களே நீங்கள் என் உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் என் உடல் நீங்கள், என்னைக் கஷ்டத்திலிருந்து விடுத்தீர்கள். ராஜா சுக்கிரீவன் நல்ல நண்பர்களைப் பெற்ற பாக்கியசாலி" என்று
புகழுகிறார்.


7. தஞ்சம் அடைந்தவரைக் காப்பாற்றுதல்
விபீஷணர் இராவணனனைவிட்டு ஒடி வந்து ஸ்ரீரமனைத் தஞ்சம் அடைந்த போது பலர் அவரைசேர்த்துக் கொள்ளத் தடுக்கின்றனர்.
ராமர் சொல்கிறார்..


"மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தே ரக்ஷோ யத் யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேததகர்ஹிதம்"


"நட்பு உணர்ச்சியால் என்னிடம் அடைக்கலம் கேட்டு வந்திருக்கும் விபீஷணனை என்னால் தள்ளமுடியாது. அவனிடம் எக்குற்றம் இருப்பினும் அவனுக்கு ஆதரவு தருவது தான் நல்லது" என்கிறார்.
இதே போல் செய்நன்றி அறிதல், குடிமக்களைத் தன் மக்கள்போல் பாவித்து நன்மை செய்தல், மன்னிக்கும் குணம் என்று அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.


"ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதய சீதாய பதயே நம:"


ஸ்ரீ ராமருக்கே இதை அர்ப்பணிக்கிறேன்

அன்புடன் விசாலம்

No comments: