Saturday, April 7, 2007

சிவசக்தி!



சிதம்பரமும் மதுரையும் இரண்டு விஷயங்களுக்குப் பெயர் போனது.

மதுரை பெண் ஆட்சி, சிதம்பரம் ஆண் ஆட்சி. வீட்டில் ஆண் ஒங்கி இருந்தால் 'உங்கள் வீட்டில் சிதம்பரமா?' என்பார்கள்.
இது இரண்டும் தனிப்பட்ட முறையில் இயங்காமல் இரண்டும் சேர்ந்து இயங்கும் இயக்கம்தான் சிவ சக்தியின் பெருமை. இந்தச் சக்தி சிவனுடன் சேர்ந்த தினம் தான் கார்த்திகை அத்துடன் ஆறுமுகம் பிறந்த தினமும் கூட, துர்கை சக்தியின் பின் மறைந்து மகிஷாசுரனை வதைத்த தினம் அடிமுடி காணாமல் அக்னிப் பிழம்பாய் சிவனாய் வந்து தரிசனம் கொடுத்த தினம்.
நாம் சிவ சக்தியைச் சற்று பார்ப்போம்! நம் நாட்டில் தற்போது நிலமைக்கு விட்டுக் கொடுக்கும் தனமை வளர்க்க, சிவசக்தி பாவம் மிகவும் முக்கியம். ஆண்பாதி பெண்பாதி என்று வந்து மிகப் பெரிய தத்துவத்தை உணர்த்துகிறார் 'அர்த்தநாரீஸ்வரர்'. இருவரும் வாழ்க்கையில் சரிசமமாகப் பின்னப்பட்டவர்கள் என்று எடுத்துறைக்கிறார், கடவுள் காண்பித்தாலும் ஆண் ஆதிக்கம் தான் அதிகமாகத் தென்படுகிறது, நீரில் எப்படிக் குளிர்ச்சியோ நெருப்பில் எப்படி வெப்பம் பிரிக்க முடியாதோ, அதே போல் சிவத்திலிருந்து சக்தி பிரிக்க முடியாது. சிவ சக்தியுடன் இந்தப் பிரபஞ்சம் உண்டானதால் சிவன் தந்தையாகவும் சக்தி தாயாகவும் வருகிறார்கள்.
இப்போது புராணத்தைப் பார்ப்போம்! சிவபெருமான் தியானத்தில் இருக்க அப்போது பார்வதி அங்கு வர, தியனத்திலேயே மூழ்கியிருப்பதைப்

பார்த்து பார்வதி அருணாசல மலைக்குச் செல்ல தானும் தவம் இருக்கிறாள். பின் பார்வதி அருணாசலேஸ்வரரைப் பார்த்து அவரே சிவன் என்று உணர அவரிடம் செல்ல அவரும் பார்வதியைத் தன் பாதி பகுதியில்
சேர்த்துக் கொண்டார் அர்த்தாங்கினி என்று சொல்வது வழக்கம்

இதைத்தான் ஆங்கிலத்திலும் better half என்கிறார்களோ? திருவண்ணாமலையில் இந்தக் கார்த்திகைத் தீபத்திருநாளில்
அர்த்தநாரீஸ்வரரும் தேரில் பவனி வருவார்.


ஓம் சிவசக்தி


அன்புடன் விசாலம்

No comments: