Saturday, April 7, 2007

ஏசு பிறந்தார்…


ஏசு பிறந்தார்!
அன்பு ஏசு பிறந்தார்...
வாழ்வில் ஒளி தெரியுதம்மா,
அன்னை மேரி அன்பு மகன்
ஒளியுடன் தோன்றினாரம்மா...
தொழுவம் ஒன்றில் பிறந்த பாலனே
அன்பைப் பரப்பிய அன்பு தயாளனே
சிலுவையில் அடித்தும் மன்னித்த தேவனே
உயிர் விட்டப் பின்னும் உயிர் பெற்ற நேசனே,
அதிசயம் நடத்தி வாழ்வளிக்கும் அன்பனே
ஊமைப் பேச, முடவன் நடக்க
இயலாத ஒன்றையும் நடத்திடும் செல்வனே
கடவுளின் தூதனே எங்களின் தேவனே!
உன் அருள் இறங்கட்டும்
எங்கள் வாழ்வு சிறக்கட்டும்
"தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்"

"Merry Xmas"
அன்புடன் விசாலம்

No comments: