Friday, April 20, 2007

ரோஜா..!




அன்று ஒரு நாள் ரேடியோவைத் திருப்ப பழையக் கால பாடல் ஒன்று வ்ந்து என் காதில் இனிமையாகப் பாய்ந்தது


"ரோஜா மலரே! ராஜ குமாரி அருகில் வரலாமா..?"

பின் ஒரு நாள் டி,வியில் "ரோஜா ரோஜா" என்ற பாட்டு வந்தது.


"அதன் பலன் தான் இந்தக் கட்டுரை.ரோஜா என்றாலே அழகோ அழகு ! அதுவும் நல்ல சிவப்பு ரோஜா என்றால் கேட்கவும் வேண்டுமா? காதலைத் தெரிவிக்க ஒரு அருமையான சின்னம் சிவப்பு ரோஜா!

காதலன் ஒரு சிவப்பு ரோஜாவைக் கையில் பிடித்து காதலிக்கு ஆசையுடன் நீட்ட அதன் விளைவு நல்லதாகவும் இருக்கும்... மாறுபட்டும் இருக்கும்."செருப்பு பிஞ்சிடும்" என்ற சினிமா வசனம் ஞாபகம் வருகிறது.

ரோஜாவின் botanical name ரோஸா செந்திபோலியா centipolia, ரோஜா பல வர்ணங்களுடன் நம்மைக் கவருகிறது குடியரசுத் தலைவரின் அரண்மனையில் ஜனவரி மாதக் கடைசியில் பொது ஜனங்களுக்கு ரோஸ் கார்டென் என்ற ரோஜாத் தோட்டம் பார்க்க அனுமதிக்கிறார்கள்.
அவைகளின் அழகும் அளவும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அதைப் பராமரிக்க பலர் இருக்கின்றனர். நான் ஒவ்வொரு வருடமும் அதைப் பார்த்து சொக்கி நிற்பதும் உண்டு. ரோஜா என்றாலே காதலும் காதலனும் தான் மனதில் வருகிறார்கள் இதில் முதன் முதலில் ரோம் நகர மக்கள் தான் முன்னணியாக நிற்கின்றனர். அந்தப் பூக்களின் இதழ்களைப் படுக்கை அறையில் உதிர்த்து அதில் படுத்துக் கொள்வார்கள். பின் தன் வெயின் என்ற மதுவிலும் இதழ்களை அலங்கரித்து வைப்பார்களாம் இதைத் தவிர பன்னீர் தயாரித்து குளிக்கும் தன்ணீரில் இதழ்களுடன் போட்டு பின் குளிபார்களாம் அது சருமத்திற்க்கு மிகவும் நல்லது என்று உணர்ந்தார்கள். ரோஸில் கிரீம் போன்றும் தயாரித்தார்களாம். ரோஜா பூச்செண்டிற்கு தனி மதிப்பு..!

இரண்டாவது உலக மஹா யுத்தம் போது லண்டனில் இதைக் காது வலி பல் வலிக்கும் உபயோகித்தார்கள் அதன் பன்னீரை கண்ணிலும் விட்டுக் கொண்டனர் ரோஜாவின் இதழுடன் அதன் அடிப்பாகமும் மருந்தாய் உபயோகிக்கப் பட்டது, இதில் ரோஜா ஜெல்லி ஜூஸ்
போன்றவைகள் செய்து குழந்தைகளுக்கு ஒரு பானமாகக் கொடுத்தனர்.

இந்தியாவில் ரோஜா அதிகமாக வடக்கு பகுதியில் அலிகர், சண்டிகர், ஹரியானா, காஷ்மீர் போன்ற இடத்தில் வளர்க்கப் படுகின்றன தெற்கில் பெங்களூர் மைசூரிலும் நிறைய வகைகள் வருகின்றன. ரோஜா சுமார் முப்பது மில்லியன் வருடங்களுக்கு முன்பே இருந்தது என்று புதைபொருள் ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறனர். அவர்கள் ஒரு வண்ணப்படம் பார்த்ததில் அது கிரிடேன் அரண்மனையும் எகிப்து கல்லறையையும் ரோஜாப் பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சீனர்கள் 2737 பிசி ரோஜவைப் பல விதங்களில் பயன் படுத்தினர். அதில் ரோஸ் டீ மிகப் பிரசித்தம். சீனாவில் இதற்கு யூஜிஹுவா என்று பெயர். பல மொழிகளில் அதிகமாக குலாப் என்ற பெயரில் இருக்கிறது {பெங்காலி,கன்னடம்,தெலுங்கு,உருது,ஹிந்தி} மலையாளத்தில் பன்னீர் பூவு, தமிழில் ரோஜா ஆங்கிலத்தில் ரோஸ், சம்ஸ்கிருதத்தில் சதபத்ரி, சௌம்யா அன்னை ரோஜாவை Love for the divine கடவுளுக்காக அன்பு, என்றும் சிவப்பு ரோஜாவை humans passions change into love for the divine என்கிறார். ரோஜவிற்கு பல மருத்துவ குணங்கள் உண்டு, குல்கந்து என்ற ரோஜாவின் இதழ்களால் செய்யும் இலேகியம் ஹிருதயத்திற்கும்
இரத்த ஒட்டத்திற்கும் மிகச் சிறந்தது. மருத்துவ குணங்களைப் பிறகு இடுகிறேன்.

அன்புடன் விசாலம்

No comments: