Sunday, April 8, 2007

கதா காலக்ஷேபம்!

நம்பிக்கை, முத்தமிழ்,இல்லம்...சபாக்களின் முதல்வர்களே! எனக்கு ரொம்ப நாளாக
கதாகாலட்சேபம் செய்ய ஆசை! டிவியில் முயன்றேன் கிடைக்கவில்லை, பழையகால
வில்லுப் பாட்டு கதாகாலட்சேபம் போன்றவை இப்போது காண்பது அரிதாகி விட்டது.
தற்போது திருமதி.விசாகா ஹரி என்ற பெண்மணி கதாகாலட்சேபம் மிகவும் அழகாக செய்கிறாள். இந்தக் கலையை நாமும் வளர்க்கலாமே! சரி எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமா? எனக்கு ஆதரவு தந்து கைத்தட்டி{தட்டினலும் காது கேட்காதே}ஊக்கம் கொடுப்பீர்கள் என் நம்புகிறேன். பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு வீட்டின் உள்ளேயே காபி,டிபன் எதாவது வீசி எறிந்தால், உங்கள் கணினி...ஜாக்கிரதை! இந்த ஞாயிறு அன்று நடத்த சான்ஸ் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பாட்டும் உண்டு! ஆனால் உங்களுக்கு கேட்காது.
ஹா...ஹா...ஹா..!

அன்புடன் விசாலம்

No comments: