Wednesday, April 25, 2007

அம்மா..! என்று நீ என்னை அணைப்பாய்?


அம்மா என்று என்னை அணைப்பாய் நீ!
என் மழலை மொழிகளைக் கேட்பாய் நீ!
அம்புலி மாமா காட்டி
பப்பூ மம்மூ ஊட்டுவாய்!
ஒரு எட்டு மணி அடிக்க
கொண்டு போடுகிறாய் காப்பகத்தில்...
அங்கு அன்பில்லாமல் ஒரு தூக்கம்,
ஒரு தாலாட்டு பாட்டிற்கு ஏக்கம்,
உன்னைவிட்டுப் பிரிந்த துக்கம்,
மனதில் நுழையும் ஒரு தாக்கம்,
திரும்பி வருகிறாய் அலுப்புடன்
வீசுகிறாய் கைப்பயை சலிப்புடன்,
அப்பாவுடன் சண்டை வலுவுடன்,
பார்க்கிறேன் மனக் கசப்புடன்,
கூச்சல் ஏற கையும் ஓங்க...
பயந்து நிற்கிறேன் ஒரு கோடியில்,
வாயடைத்துப் போகிறேன் மாடியில்,
பாட்டி தாத்தா வேணுமம்மா...
அவர்கள் அன்பில் பிணைவேன் அம்மா


அன்புடன் விசாலம்

No comments: