Wednesday, April 25, 2007

என் நினைவில் திருமதி முக்தாம்மா


பதம் ஜாவளி என்ற பெயர் சொன்னாலே திருமதி பிருந்தா, திருமதி முக்தா அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. வீணை தனம்மாள் பெற்றெடுத்த மாணிக்கங்கள்... ஸ்ரீமதி பிருந்தா, ஸ்ரீமதி முக்தா, ஸ்ரீமதி பாலஸரஸ்வதி, திருமதி பால ஸரஸ்வதி பரத நாட்டியத்தில் பெரிய இடத்தைப் பிடித்தவர். இவர்களில் எஞ்சி நின்ற முக்தா அம்மாவும் போன வாரம் காலமானார். பதம் ஜாவளி பாடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். இவர்களை மும்பையில் திருமதி ராஜலட்சுமி {திருமதி அருணா சாயிராமின் தாய்} வீட்டில் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முக்தாம்மா பதம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார், நானும் அதை ஆனந்தமாகக் கேட்டேன். இவர் பதம் பாடினால் மிகவும் கணீர் என்று இருக்கும்.
ஆனால் இந்த அவசர யுகத்திற்கு அவரது பாட்டு ஒத்துக் கொள்வதில்லை. ஏன் என்றால் அவரது பாட்டு நெஞ்சின் உள்ளிலிருந்து ஆழமாக கிளம்பி மிகவும் மெதுவாக அனுபவித்து அந்த பாட்டின் கடவுளை எதிரே கொண்டு வந்து நிறுத்தி விடுவார். அவர் பாடிய சில பாடல்கள் "ஜானகி ரமண...மாமவ பட்டாபி ராமா..." இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அவரது ஜாவளி "மருபாரி" மறக்க முடியவில்லை. கர்நாடக சங்கீதப் பிரியரகளுக்கு அவர் என்றும் நீங்காத நினைவாக இருப்பார்கள் என்பது திண்ணம். முக்தா அம்மவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

அன்புடன் விசாலம்

No comments: