Sunday, April 22, 2007

தாயானாலும் நான் தாயல்ல...


நான் ஒரு தாய்
ஆனால் நான் தாய் அல்ல ,
இர்ண்டு குழந்தைகள் பெற்றேன்
அழகு பெண் ஒன்று,
ராஜா போல் ஆண் ஒன்று,
ஆனாலும் கொஞ்ச
மகவுகள் இல்லை,
குழந்தைகள் தான் பெற்றேன்
ஆனால் கணவன் இல்லை
தாய்மை அடைந்தேன்
உடலில் இன்பம் இல்லை,
ஒரு உணர்ச்சியும் இல்லை ,
தலைவனின் த்ழுவல் இல்லை,
கொஞ்சலும் இல்லை
ஒரு ஊடலும் இல்லை
ஒரு சாடலும் இல்லை,
ஆனால் ராஜமரியாதை
கொடிக்கட்டி பறக்கும் எனக்காக
இரண்டு நாட்கள் பாலூட்டினேன்
உச்சி முகர்ந்தேன்.
குழந்தைப் பார்க்க,
வந்தனர் உறவினர்,
தம்பதி வந்தனர்,
க்ட்டி அணைத்தனர்.
இனிப்பு வழங்கினர்
நான் கட்டிலில்.
அநாதையாய்...
கண்களில் நீர் வழிந்தது
மனமும் கூட கனத்தது,
ஒரு மனிதன் வந்தான்,
கை கூப்பினான்
"நன்றி" என்றான்,
கையில் வைத்தான்
ஒரு ஐந்து லட்சம்.
முடிந்தது என் பங்கு,
பெத்துக் கொடுத்ததின்
பரிசு இது...
குழந்தையைப் பார்த்தேன்
முடிந்தது என் பங்கு
பின் நீ யாரோ?
நான் யாரோ?
என் தம்பியின் கல்லூரி
என் தங்கையின் திருமணம்,
காத்து நிற்கும் இந்தப் பணம்
ஊசியால் விந்து செலுத்த
வந்துதித்தாள் ஒரு தேவதை
அந்த தேவதைக்கு நான் தாய்,
ஒரு வாடகைத் தாய்
பிறக்கும் வரை எனக்கு சொந்தம்
முடிந்தபின் இல்லை பந்தம்...


அன்புடன் விசாலம்

No comments: