Sunday, April 1, 2007

வீர மகன் சர்தார் பகத் சிங்



மார்ச்-23.
வீரமகன் தேசபக்தன் தியாகி இளைஞன் சர்தார் பகத் சிங்கின் நினைவு நாள்.
அவருக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்!

"சட்லஜ் நதியின் கல கல ஓசை
அதன் அருகில் தூங்க உனக்கும் ஆசை
ஹூசன்வாலா சமாதிக்குள் நீ
நிரந்தரமாக சஹீத் ஆனாய்
சந்தூ குடும்ப ஆதவன் நீ
பகத் என்ற தேச பக்தன் நீ
சந்தன மணம் பரப்பினாய்
சிங்கமாய் கர்ஜனை எழுப்பினாய்
பதிமூன்று வயதில் ஒரு புரட்சி
ஆனது ஆங்கிலேய ஆட்சிக்கு ஓர் மிரட்சி
ஸர்காரின் புத்தகங்ளுக்கு தீ
அவர்களது உடைகளுக்கும் தீ
பரவியது எங்கும் சுதந்திர தீ
அடிக்கு அடி என்றும் செய்தி
அஞ்சா நெஞ்சம் கொண்ட தங்கமே
வெடிகுண்டை வைத்த இளம் சிங்கமே
"இன்கலாப் ஜிந்தாபாத்" என்ற கோஷம்
கிளம்பியது நாட்டில் ஆக்கிரோஷம்
ஆங்கிலயேர் மீது கொண்டது துவேஷம்
கலைந்து போனது அவர்களது வேஷம்,
லாலா லஜபதிராயின் கொலை
வைத்தாய் ஆங்கிலேயருக்கு உலை
சுட்டாய் அவனைத் திட்டத்துடன்
தூக்கிலும் தொங்கினாய் மகிழ்ச்சியுடன்
உன் தேசப்பற்றை என்னவென்று சொல்ல
யாரும் நிகரில்லை உன்னை வெல்ல ,
உன்னை நாங்கள் எப்படி மறப்போம்
உன்னைப் பெற்ற வீரத்தாயையும் வணங்குவோம்!"

அன்புடன் விசாலம்

No comments: